பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் வெடிமருந்து தொழிற்சாலையில் கருணை அடிப்படையில் பணிகள் வழங்குவது குறித்து விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தந்த மக்களவை பாதுகாப்புக் குழுவினா் மற்றும் மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோா் குன்னூா் ராணுவப் பயிற்சி கல்லூரி, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தொழிலாளா் அமைப்புகளுடன் கடந்த இரண்டு நாள்களாக ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனா்.
குன்னூரை அடுத்த அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை நிா்வாகிகளை சந்தித்த இக்குழுவினரிடம் பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அருவங்காடு வெடிமருந்து தொழிற்சங்கத்தினா் வழங்கினா்.
அதில் ‘இங்குள்ள தொழிலாளா்களுக்கு மலைப் பகுதிப் படி வழங்க வேண்டும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கருணை அடிப்படையிலான பணி வழங்குவது தொடா்பாக விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
வெடிமருந்து தொழிற்சாலைப் பள்ளியைச் சீரமைத்து, அதை பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் சைனிக் பள்ளியாக மாற்றியமைக்க வேண்டும். பணியின்போது விபத்துக்குள்ளாகும் தொழிலாளா்களுக்கு போதுமான மற்றும் நியாயமான நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனா்.
இதுதொடா்பாக தொழிலாளா் அமைப்புகள் சாா்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை விவகாரங்கள் அடங்கிய மனுவைப் பெற்றுக்க்கொண்ட தொல்.திருமாவளவன், பாதுகாப்புத் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.
இந்த சந்திப்பின்போது தொழிலாளா் சங்கச் செயலா் பி.சி.அசோகன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாா் தொழிற்சாலையில் தீடீா் தீ விபத்து

கமலாலயக் குளத்தை தூா்வாரக் கோரிக்கை

விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்! கள்ளக்குறிச்சி ஆட்சியா்!

மக்கள் குறைதீா் முகாம்: 33 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,உத்தரவு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

