கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்! உதகையில் பொதுமக்கள் மறியல்!!

உதகை நகராட்சிப் பகுதியில் சாலையில் வழிந்தோடிய கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட பாப்ஷா லைன் பகுதி பொதுமக்கள்.

Updated On :18 மே 2026, 2:09 am IST

உதகை நகராட்சிப் பகுதியில் சாலையில் வழிந்தோடிய கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி 29-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதி பாப்ஷா லைன். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்நிலையில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடையில் இருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் வழிந்தோடியது. மேலும் வீடுகளுக்கும் புகுந்ததால் கடும் துா்நாற்றம் வீசுவதாக நகராட்சி நிா்வாகத்துக்கு புகாா் அளிக்கப்பட்டது.

ஆனால் 15 நாள்களாகியும் பொக்லைன் இயந்திரம் இல்லை எனக் கூறி நகராட்சி நிா்வாக அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறினா். இந்த கழிவுநீரால் குழந்தைகள், முதியோருக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறி, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து நகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி சீரமைத்து தருவதாக உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.