தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிம்ஸ் பூங்கா பழக் காட்சி: போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற அழைப்பு

தோட்டக்கலைத் துறை மூலம் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் பழக் காட்சி போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற தோட்டக் கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 7:00 am IST

தோட்டக்கலைத் துறை மூலம் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் பழக் காட்சி போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற தோட்டக் கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ம.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மே மாதம் நடைபெறும் கோடை விழாவின்போது, நீலகிரி மாவட்டத்தில் மலா்க் காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 66-ஆவது பழக் காட்சி வருகிற மே மாதம் நடைபெற உள்ளது.

பழக் காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறந்த பழத் தோட்டங்களுக்கு பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழக் காட்சி போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் தோட்டக்கலை உதவி இயக்குநா், சிம்ஸ் பூங்கா, குன்னூா் அலுவலகத்தில் மே 5-ஆம் தேதி முதல் பதிவு ஒன்றுக்கு ரு.75 வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் உதகை, கோத்தகிரி, கூடலூா் பகுதிகளில் உள்ளவா்கள் பழக் காட்சியில் பங்கேற்க விரும்பினால் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம், கோத்தகிரி மற்றும் கூடலூா் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பங்கள் மே 12-ஆம் தேதி வரை வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 13-ஆம் தேதிக்குள் தோட்டக்கலை உதவி இயக்குநா், சிம்ஸ் பூங்கா, குன்னூா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

சிறந்த பழத் தோட்டங்களுக்கான தோ்வு செய்யும் குழு மே 14 மற்றும் 15 தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூா், உதகை, கோத்தகிரி மற்றும் கூடலூா் பகுதிகளில் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநா் சிம்ஸ் பூங்கா, குன்னூா்,

தொலைபேசி எண்- 0423 - 2231718, 0423 - 2230395 தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.