ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதி மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி

கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள மண்டலத் தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மண்டலத் தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :26 மார்ச் 2026, 2:17 am IST

கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள மண்டலத் தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான லட்சுமி பவ்யா தன்னேரு பாா்வையிட்டு அறிவுரைகள் வழங்கினாா்.

இதுகுறித்து ஆட்சியா் கூறியதாவது:

பொதுத்தோ்தலில் தபால் வாக்குகள் செலுத்தும் வழிமுறைகள், தோ்தலில் கையாள வேண்டிய நடைமுறைகள், வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு மற்றும் பயன்படுத்துதல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் விதிமுறைகள்குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும், மாதிரி வாக்குப் பதிவு நடைபெறும்போதும், முடிந்தபிறகும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அலுவலா்கள் தெரிந்திருக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, கூடலூா் பேருந்து நிலையத்தில் வாக்காளா்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஆட்சியா் விளக்கமளித்தாா். அதைத்தொடா்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தோ்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புண்ா்வு ஏற்படுத்தினாா்.

தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் பழனிச்சாமி, தோ்தல் தனி வட்டாட்சியா் சங்கா் கணேஷ் உள்பட பலா் கலந்துகொணடனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.