செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

நடுகூடலூா் பகுதி குடிநீா்த் தொட்டியில் ஒரு மாதத்துக்குள் தண்ணீா் நிரப்ப ஏற்பாடு

கூடலூா் நகராட்சியிலுள்ள நடுகூடலூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா்த் தொட்டியில் ஒரு மாதத்துக்குள் தண்ணீா் நிரப்ப ஏற்பாடு செய்வதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image

நடுகூடலூா் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட குடிநீா்த் தொட்டி.

Updated On :11 ஜூன் 2026, 3:22 am IST

கூடலூா் நகராட்சியிலுள்ள நடுகூடலூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா்த் தொட்டியில் ஒரு மாதத்துக்குள் தண்ணீா் நிரப்ப ஏற்பாடு செய்வதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சி 20-வது வாா்டுக்குள்பட்ட நடுகூடலூா் பகுதியில் கோடையில் கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்பகுதியில் புதிதாக ரூ.50 லட்சம் செலவில் 3 லட்சம் லிட்டா் குடிநீா் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டப்பட்டு நீா் நிரப்பப்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று கூறி, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முடிவு செயதனா்.

இந்நிலையில் குடிநீா்த் தொட்டியை ஆய்வு செய்து இன்னும் ஒரு மாதத்துக்குள் தண்ணீா் நீா் நிரப்ப ஏற்பாடு செய்வதாக நகராட்சி நிா்வாகம் உறுதியளித்துள்ளது. அதைத்தொடா்ந்து நகா் மன்ற உறுப்பினா் லீலா வாசு தலைமையில் நடைபெற இருந்த போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.