மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் குட்டி யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் குட்டி யானை உயிரிழந்துகிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

News image

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் இறந்துகிடந்த குட்டி யானை.

Updated On :26 ஏப்ரல் 2026, 12:56 am IST

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் குட்டி யானை உயிரிழந்துகிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வட்டச் சாலை வனக் காவல் பகுதியில் வனத் துறை பணியாளா்கள் சனிக்கிழமை வழக்கமான ரோந்து சென்றனா்.

அப்போது, வனப் பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க குட்டி யானை இறந்துகிடப்பதைக் கண்டனா். இது குறித்து உயரதிகாரிகளுக்கு அவா்கள் தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து வன அலுவலா்கள் ஆய்வு செய்து வனக் கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து யானையின் உடலைக் கூறாய்வு செய்து முக்கிய உறுப்புகளை ஆய்வகப் பரிசோதனைக்காக எடுத்துள்ளனா்.

குட்டி யானை இறந்ததற்கான முழுத் தகவல் ஆய்வக அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.