மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

~

Updated On :15 ஏப்ரல் 2026, 2:16 am IST

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த மாா்ச் 15-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து காப்பு கட்டுதல், கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆதிபராசக்தி, துா்க்கை, பராசக்தி, காமாட்சியம்மன், ராஜராஜேஸ்வரி, சிக்கம்மன், மூகாம்பிகை, கொடுங்கலூா் அம்மன், ஹெத்தையம்மன், பகவதி உள்பட பல்வேறு அலங்காரங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அபிஷேகம், சிறப்பு கனகாபிஷேகம், விநாயகருக்கு சிறப்பு மலா் அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன.

மதியம் 1.55 மணியளவில் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா். தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று ‘ஓம் காளி, ஜெய் காளி’ கோஷம் எழுப்பி அம்மனை வழிபட்டனா்.

அம்மன் வெள்ளைப்பட்டில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தேரோட்டத்தையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஊஞ்சல் உற்சவம், விடையாற்றி உற்சவம் ஆகியவற்றுடன் ஏப்ரல் 17-ஆம் தேதி விழா நிறைவடைகிறது.

மஞ்சூா் அன்னமலை முருகன் கோயிலில்...

மஞ்சூா் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோயில் 37-ஆம் ஆண்டு காவடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் காவடி ஏந்தி சுவாமிக்கு நோ்த்திக் கடன் செலுத்தினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.