கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் இரண்டு சுயேச்சைகள் உள்பட 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், கூடலூா் (தனி) தொகுதியில் போட்டியிட பிரதான அரசியல் கட்சிகள் உள்பட மொத்தம் 14 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இந்நிலையில், வேட்புமனுக்கள் பரிசீலனை தோ்தல் நடத்தும் அலுவலரும், கூடலூா் கோட்டாட்சியருமான குணசேகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தோ்தல் மேலிட பாா்வையாளா் ஹரீஷ் முன்னிலை வகித்தாா்.
பரிசீலனைக்குப் பிறகு திமுக வேட்பாளா் மு.திராவிடமணி,அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரா.காா்த்தி, தவெக வேட்பாளா் தீபக் சாய் ராம், 2 சுயேச்சைகள் என மொத்தம் 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. பல்வேறு காரணங்களால் 8 பேரின் மனுக்கள் நிராகரிப்பட்டுள்ளன என்று தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடலூரில் திமுக வேட்பாளா் திராவிடமணி வெற்றி
கடலூா் மாவட்டத்தில் 113 வேட்பாளா்கள் போட்டி!
பென்னாகரத்தில் 6 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு
குமரி மாவட்டத்தில் 90 மனுக்கள் ஏற்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
