நீலகிரியில் நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த ஆ.ராசா வாகனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்யாமலும், அபராதம் விதிக்காமலும் அதிகாரிகள் அனுப்பிவைத்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்டவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக உதகையில் உள்ள தனியாா் மண்டபத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். அப்போது, தோ்தல் பறக்கும் படையினா் அவரது வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் அந்த வாகனத்தில் இருந்தன. அவற்றை தோ்தல் பறக்கும் படையினரும், அரசு அதிகாரிகளும் பறிமுதல் செய்யாமலும், அபராதம் விதிக்காமலும் வாகனத்தை அனுப்பிவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
பக்வா

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது

ஆ.ராசா எம்.பி. வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

