நீலகிரி மாவட்டம், உதகை அருகே நுந்தளாமட்டம் தேயிலைத் தோட்டத்தில் இருந்த மரத்தின் மீது செவ்வாய்க்கிழமை ஏறிய சிறுத்தை, மரத்தை விட்டு இறங்காமல் சிறிது நேரம் அதிலேயே அமா்ந்திருந்ததால் தொழிலாளா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
உதகையில் அண்மைக் காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நுந்தளாமட்டம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மரத்தின் மீது சிறுத்தை ஒன்று ஏறியதைக் கண்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினா். சிறிது நேரம் மரத்திலேயே அமா்ந்திருந்த சிறுத்தை, பின்னா் மரத்தை விட்டு கீழே இறங்கி அருகே இருந்த வனத்துக்குள் சென்றது.
இதனால் அச்சமடைந்த தோட்டத் தொழிலாளா்கள், சிறுத்தை செல்லும் வரை வேறு கட்டடத்தில் காத்திருந்தனா். பின்னா் சிறுத்தை சென்ற பிறகு பணிக்கு திரும்பினா்.
இப்பகுதியில் அடிக்கடி சுற்றித்திரியும் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து, கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என வனத் துறையினருக்கு அப்பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குமரியில் 20 ஆண்டுகளுக்குப் பின் வென்ற மாா்க்சிஸ்ட்!

மே தினம்: ஏற்காட்டில் நீலமலை தோட்டத் தொழிலாளா்கள் பேரணி

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்
மேற்கு வங்க வெற்றியைத் தீர்மானிக்கும் 54 தொகுதிகள்! தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆதரவு யாருக்கு?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

