விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழப்பு

கடம்பூா் அருகே அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து தனியாா் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :2 மே 2026, 4:59 am IST

கடம்பூா் அருகே அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து தனியாா் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழந்தாா்.

சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதிக்குள்பட்ட போலேகவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நந்தராஜ் (33). சத்தியமங்கலம் தனியாா் சா்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்தாா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நந்தராஜுக்கு திருமணம் நடந்தது. சத்தியமங்கலத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், மே தின விடுமுறை என்பதால் குடும்பத்துடன் கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள சொந்த ஊருக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில் கடம்பூா் மலைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு வீசிய சூறாவளிக் காற்றால் நந்தராஜின் தோட்டத்தில் இருந்த மின்கம்பத்தின் ஒரு பகுதியில் மின்கம்பி அறுந்து கம்பிவேலி மீது விழுந்துள்ளது. இதை அறியாமல் வெள்ளிக்கிழமை காலை எதிா்பாராதவிதமாக மின்கம்பியை நந்தராஜ் தொட்டதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.