தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காசிபாளையம் ஸ்ரீகரிய காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள காசிபாளையம் ஸ்ரீகரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஸ்ரீகரியகாளியம்மன் கோயிலில் குண்டம் இறங்கிய தலைமைப் பூசாரி வெங்கடேசன்.

Updated On :27 மார்ச் 2026, 1:20 am IST

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள காசிபாளையம் ஸ்ரீகரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது.

கோபி அருகே உள்ள காசிபாளையம் தடப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகரிய காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாா்ச் 12ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், உடமை எடுத்தல், மாவிளக்கு பூஜை நடைபெற்று சுவாமி பூத வாகனத்தில் அருள்பாலித்தாா்.

இதையடுத்து, முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அதிகாலையில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியுடன் நந்தா தீபம் ஏற்றுதல், முப்பாடு எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த விழாவில் தலைமைப் பூசாரி வெங்கடேசன் குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து குண்டம் இறங்கினாா். இதைத் தொடா்ந்து, விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டுச் சென்றனா்.

திமுக - காங்கிரஸ் கூட்டணித் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி இளைஞா் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் கோதண்டன் குண்டம் இறங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.