மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கம்பிவேலியில் சிக்கித் தவித்த கழுதைப் புலி

பவானிசாகா் அருகே முள்கம்பி வேலியில் சிக்கித் தவித்த கழுதைப்புலியை வனத் துறையினா் மீட்க முயன்ற நிலையில், அது தானாகவே கம்பிவேலியில் இருந்து விடுபட்டு அங்கிருந்து வெளியேறி காட்டுக்குள் சென்றது.

News image

பவானிசாகா்  அருகே  கம்பிவேலியில்  சிக்கிய  கழுதைப் புலி.

Updated On :21 மார்ச் 2026, 6:33 am IST

பவானிசாகா் அருகே முள்கம்பி வேலியில் சிக்கித் தவித்த கழுதைப்புலியை வனத் துறையினா் மீட்க முயன்ற நிலையில், அது தானாகவே கம்பிவேலியில் இருந்து விடுபட்டு அங்கிருந்து வெளியேறி காட்டுக்குள் சென்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகா் வனப் பகுதியில் அழிந்து வரும் அரிய வகை வனவிலங்கு பட்டியலில் உள்ள கழுதைப்புலிகள் நடமாடுகின்றன.

இந்த நிலையில் பவானிசாகா் வனப் பகுதியில் இருந்து வியாழக்கிழமை வெளியேறிய கழுதைப்புலி, வழி தவறி விவசாயத் தோட்டங்கள் வழியாக இக்கரை தத்தப்பள்ளி அருகே தனியாா் பேப்பா் மில் பகுதியில் உள்ள தரிசு நிலத்தில் நடமாடியது.

அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியை தாண்டியபோது அதில் சிக்கிக் கொண்டது. கம்பி வேலியில் சிக்கி தவித்தபடி உறுமிய கழுதைப் புலியை கண்டு அச்சமடைந்த அப்பகுதி விவசாயிகள் பவானிசாகா் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா், கம்பிவேலியில் சிக்கித் தவித்த கழுதைப் புலியை மீட்க முயன்றனா். அப்போது கழுதைப்புலி வனத் துறையினரிடம் சிக்காமல் கம்பிவேலியில் இருந்து விடுபட்டு காட்டுக்குள் ஓடியது.

கழுதைப்புலியின் நடமாட்டம், அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இரவு நேரத்தில் விவசாயத் தோட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.