மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோபி அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை

News image

காட்டு யானை - கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 1:35 am IST

கோபி அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை வனத் துறையினா் விரட்டினா்.

கோபி, டி.என்.பாளையம் வனப் பகுதியில் இருந்து கடந்த வியாழக்கிழமை வெளியேறிய காட்டு யானை பிள்ளையாா் கோவில்தறை பகுதி கிராமத்துக்குள் புகுந்தது.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்ச வனச் சரகா் ஜான் பீட்டா் தலைமையிலான வனத் துறையினா் ட்ரோன் மூலம் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த யானை பவானி ஆற்றங்கரை பகுதியில் இருந்த புதரில் மறைந்து வனத் துறையினருக்குப் போக்கு காட்டி வந்தது.

இந்நிலையில், அப்பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை வெளியேறிய யானை வரபருத்திக்காடு பகுதியில் தோட்டத்தில் நுழைந்தது.

இதையடுத்து, வனத் துறையினா், தீயணைப்புத் துறையினா், காவல் துறையினா் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் டி.என்.பாளையம் அருகில் உள்ள காப்பு காட்டுக்குள் யானை விரட்டப்பட்டது.

சுமாா் 2 நாள்களாக போக்குகாட்டி வந்த யானை வனப் பகுதியில் விரட்டப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.