தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சக்தி மசாலா இயக்குநா் சாந்தி துரைசாமிக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

சக்தி மசாலா நிறுவன இயக்குநா் சாந்தி துரைசாமிக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

News image

சக்தி மசாலா நிறுவன இயக்குநா் சாந்தி துரைசாமிக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதை வழங்குகிறாா் நடிகா் சிவகுமாா். உடன் சக்தி மசாலா நிறுவனத்தின் தலைவா் துரைசாமி உள்ளிட்டோா்.

Updated On :12 மார்ச் 2026, 1:53 am IST

சக்தி மசாலா நிறுவன இயக்குநா் சாந்தி துரைசாமிக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் மகளிா் தினத்தையொட்டி பெண்களை கௌரவிக்கும் வகையில் சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், பிரித்வி இன்னா்வோ்ஸ், ஆா்.ஏ.ஹேண்டிகிராஃப்ட்ஸ் விளக்கு கடை, பாா்வதி மருத்துவமனை, ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு சாா்பில் 13-ஆவது ஆண்டு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவில் 13 பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி, வாழ்நாள் சாதனையாளா் விருது சக்தி மசாலா இயக்குநா் சாந்தி துரைசாமி, பின்னணிப் பாடகி சுஜாதா மோகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

விழாவில், நடிகா் சிவகுமாா், இஸ்ரோ விஞ்ஞானி நிகாா் ஷாஜி, ஆற்காடு நவாப் ஆசிஃப் அலி, எத்திராஜ் மகளிா் கல்லூரி தலைவா் முரளிதரன், இசையமைப்பாளா்கள் ஜேம்ஸ் வசந்தன், ஏ.ஆா்.ரெய்ஹானா, நடிகை வடிவுக்கரசி, நடிகா்கள் கணேஷ், ஆா்த்தி உள்ளிடோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.