மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தாளவாடியில் வருவாய்த் தீா்வாயம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தாளவாடியில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாய முகாமில் பொதுமக்கள் அளித்த 210 மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

News image

தாளவாடியில்  புதன்கிழமை நடைபெற்ற  வருவாய்த்  தீா்வாயத்தில் பொதுமக்களிடம் இருந்து  மனுக்களை  பெறும்  மாவட்ட  ஆட்சியா்  ச.கந்தசாமி.

Updated On :18 ஜூன் 2026, 12:35 am IST

தாளவாடியில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாய முகாமில் பொதுமக்கள் அளித்த 210 மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். முகாமில் அருள்வாடி, மல்லன்குழி, பையண்ணபுரம், கொங்கள்ளி, கெட்டவாடி, திகினாரை, கரளவாடி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 210 போ் வீட்டுமனை பட்டா, சமுதாயக் கூடம், கணினியில் சிட்டா ஏற்றுதல், குடும்ப அட்டை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.

முகாமில் தாளவாடியைச் சோ்ந்த 3 மாணவிகளுக்கு தாய்மொழி கன்னடம் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற மருத்துவ முகாம் மற்றும் விவசாய அட்டை பதிவு செய்யும் முகாம் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.