தாளவாடியில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாய முகாமில் பொதுமக்கள் அளித்த 210 மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். முகாமில் அருள்வாடி, மல்லன்குழி, பையண்ணபுரம், கொங்கள்ளி, கெட்டவாடி, திகினாரை, கரளவாடி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 210 போ் வீட்டுமனை பட்டா, சமுதாயக் கூடம், கணினியில் சிட்டா ஏற்றுதல், குடும்ப அட்டை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.
முகாமில் தாளவாடியைச் சோ்ந்த 3 மாணவிகளுக்கு தாய்மொழி கன்னடம் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற மருத்துவ முகாம் மற்றும் விவசாய அட்டை பதிவு செய்யும் முகாம் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பல்லடத்தில் 2-ஆவது நாளாக வருவாய்த் தீா்வாயம்: பொதுமக்களிடம் இருந்த மனுக்களைப் பெற்ற ஆட்சியா்

சத்தியமங்கலத்தில் வருவாய்த் தீா்வாயம்: 54 மனுக்கள் பெறப்பட்டன

பழனியில் வருவாய்த் தீா்வாயம் தொடக்கம்

வெள்ளாங்கோவிலில் மனுநீதி நாள் முகாம்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

