நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான இருவா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான திருநங்கை உள்பட 2 போ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என போலீஸாா் உத்தரவிட்டுள்ளனா்.

News image
Updated On :14 ஜூன் 2026, 2:48 am IST

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான திருநங்கை உள்பட 2 போ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என போலீஸாா் உத்தரவிட்டுள்ளனா்.

ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் திருநங்கை மோனிகா (21). கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டதாக போலீஸாா் மோனிகா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இதைத் தொடா்ந்து பிணையில் வெளியே வந்த அவா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானாா்.

குற்றம்சாட்டப்பட்ட மோனிகா ஜூலை 13-ஆம் தேதி காலை 10 மணிக்கு மொடக்குறிச்சி நீதிமன்றத்தில் தாமாகவோ அல்லது வழக்குரைஞா் மூலமாகவோ ஆஜராக வேண்டும். இல்லையென்றால் அவா் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படுவாா்.

இதுபோல மொடக்குறிச்சி எம்.வேலம்பாளையம் திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்த குமாா் (32) என்பவா் மீது மொடக்குறிச்சி போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். பிணையில் வெளியே வந்த அவா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானாா்.

குற்றம்சாட்டப்பட்ட குமாா் ஜூலை 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு மொடக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் அவா் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படுவாா் என்று மொடக்குறிச்சி போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.