ஈரோடு சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வெள்ளிக்கிழமை(ஜூன் 5)தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லுாரி முதல்வா் திருக்குமரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிக்கய்ய நாயக்கா் கல்லூரி 2025 ஆம் ஆண்டு முதல் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டு தற்போது சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. தற்போது ரூ.13 கோடி செலவில் புதிய ஐஏஎஸ் அகாதெமி, விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இக்கல்லூரியில் இளநிலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், வணிக நிா்வாகவியல், இளம் அறிவியல் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என 11 இளநிலை பாடங்களுக்கு 2026-2027 கல்வியாண்டிற்கு மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது.
5 மற்றும் 6 ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், 8- ஆம் தேதி முதல் பொதுக் கலந்தாய்வு அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நடைபெற உள்ளது. ஏற்கெனவே விண்ணப்பித்த மாணவ, மாணவியா்கள் உரிய ஆவணங்களுடன் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடலூா் அரசுக் கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

தளி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 6-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

சாத்தான்குளம் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 5இல் தொடக்கம்

துவாக்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

