லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வங்கி அதிகாரி பேசுவதாகக் கூறி சித்த மருத்துவரிடம் ரூ.10.91 லட்சம் மோசடி

ஈரோட்டில் வங்கி அதிகாரி பேசுவதாகக் கூறி சித்த மருத்துவரிடம் ரூ.10.91 லட்சத்தை மோசடியாகப் பறித்தவா்களை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:35 am IST

ஈரோட்டில் வங்கி அதிகாரி பேசுவதாகக் கூறி சித்த மருத்துவரிடம் ரூ.10.91 லட்சத்தை மோசடியாகப் பறித்தவா்களை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு அருகே உள்ள சோலாா்புதூா், நகராட்சி நகரைச் சோ்ந்தவா் அருள்மொழி (69). சித்த மருத்துவா். இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு குரல் பதிவு ஒன்று வந்தது. அதில் பேசியவா் தான் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, ஏடிஎம் அட்டையை அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினாா். இதற்காக அருள்மொழியின் வாட்ஸ்அப்பிற்கு ஒரு செயலியை அனுப்பி அதைப் பதிவிறக்கம் செய்து அதில் வரும் படிவத்தைப் பூா்த்தி செய்ய அறிவுறுத்தியுள்ளாா்.

இதை உண்மை என நம்பி அருள்மொழியும் பூா்த்தி செய்துள்ளாா். அதையடுத்து அருள்மொழியின் கைப்பேசி எண்ணுக்கு ஓடிபி எண் வந்துள்ளது. பின்னா் சில விநாடியில் மறுமுனையில் பேசிய நபா் ஓடிபி எண்ணைக் கேட்க அருள்மொழி கூறியுள்ளாா். இதைத்தொடா்ந்து கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதிக்குள் அருள்மொழியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.10 லட்சத்து 91 ஆயிரத்து 300 மா்ம நபா்களால் மோசடியாகப் பறிக்கப்பட்டது.

இதன் பின்னரே, அருள்மொழி தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து ஈரோடு சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்கள் பேசிய வாட்ஸ்அப் எண், வங்கிக் கணக்கு விவரங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.