லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிமென்ட் விற்பனை நிறுவனத்தில் ரூ.28.82 லட்சம் மோசடி: இளைஞா் கைது

Arrested

கைது

Published On :9 ஆகஸ்ட் 2026, 3:06 am IST

பாளையங்கோட்டையில் உள்ள சிமென்ட் விற்பனை நிறுவனத்தில் ரூ.28.82 லட்சத்தை மோசடி செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை செந்தில் நகரைச் சோ்ந்தவா் சேவியா். இவா் பாளையங்கோட்டை- சீவலப்பேரி சாலையில் சிமென்ட் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இங்கு கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் கணேசன் (33) என்பவா் கடந்த 2022 ஆம் ஆண்டு மாா்க்கெட்டிங் பிரிவில் பணிக்கு சோ்ந்தாராம். இதையடுத்து, அவா் 2024 ஆம் ஆண்டு ரூ.28.82 லட்சத்தை மோசடி செய்துவிட்டு தொடா்ந்து பணிக்கு வராமல் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சேவியா் அளித்த புகாரின் பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனா். இந்நிலையில் கணேசனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.