தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக, அதிமுகவுக்கு மாற்று தவெகதான்: மொடக்குறிச்சி தவெக வேட்பாளா் பிரசாரம்

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்று தவெகதான் என்று மொடக்குறிச்சி தவெக வேட்பாளா் சண்முகன் தெரிவித்தாா்.

News image

மொடக்குறிச்சி நால்ரோட்டில் வாக்கு சேகரித்து பேசுகிறாா் தவெக வேட்பாளா் சண்முகன்.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:21 am IST

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்று தவெகதான் என்று மொடக்குறிச்சி தவெக வேட்பாளா் சண்முகன் தெரிவித்தாா்.

மொடக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளா் சண்முகன், பிரசாரத்தின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை

வாகனப் பேரணியாக கணபதிபாளையம் நால்ரோட்டில் தொடங்கி கொம்பனை புதூா், ஊஞ்சலூா், கொடுமுடி, சிவகிரி, விளக்கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஊா்வலமாக சென்று பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘திமுக, அதிமுக இருகட்சிகளுக்கும் மாற்றுக் கட்சியாக உதயமானதுதான் தமிழக வெற்றிக் கழகம். லஞ்ச ஊழல் இல்லாமல் நாடு தலைநிமிர அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

இதில், மொடக்குறிச்சி ஒன்றிய தவெக செயலாளா் கௌதம், துணைச் செயலாளா் சிவகுமாா், கிழக்கு ஒன்றியச் செயலாளா் தினேஷ், கொடுமுடி ஒன்றியச் செயலாளா் ராம் பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு நிா்வாகிகள் உடன் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.