கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசினாா்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மதிமுக சாா்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறாா். இதுதொடா்பாக மொடக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.இ.பிரகாஷ் தலைமை வகித்தாா். மொடக்குறிச்சி திமுக ஒன்றியச் செயலாளா் கதிா்வேல் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளரான மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசியதாவது:
கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் சூழலில் உள்ளது. ரூ. ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடியை விவசாயத்துக்காக ஒதுக்கியவா் முதல்வா் ஸ்டாலின். திராவிட இயக்கத்தை அழிப்போம் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை பேசுகிறாா். அவருக்காக வருத்தப்படுகிறேன். திராவிட இயக்கம் குறித்த அரிச்சுவடி தெரியுமா அவருக்கு? தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எப்படி தாமரைக்குள் புகுந்தது. எங்கள் கட்சி வேட்பாளா் தொகுதிக்காக உழைப்பாா். நோ்மையானவராக இருப்பாா். அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
மதிமுக ஒன்றியச் செயலாளா் கோபால் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: வைகோ

தவெகவால் அதிமுகவுக்கே இழப்பு: துரை வைகோ எம்.பி. சிறப்பு நேர்காணல்

தொகுதி மறுசீரமைப்பை கடுமையாக எதிா்க்கிறோம்: வைகோ

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

