ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவாா்! முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு

ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவாா் என முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு பேச்சு...

News image

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பனை ஆதரித்து கருங்கல்பாளையத்தில் வாக்கு சேகரித்த முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:29 am IST

தோ்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவாா் என்று முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பனை ஆதரித்து, கருங்கல்பாளையம் பகுதியில் முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

70-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவா்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்து வருகின்றனா். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 1967-இல் அண்ணா ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்கினாா். இப்போது முதல்வா் அதே போன்ற ஒரு கூட்டணியை அமைத்துள்ளாா். இந்தக் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்.

தோ்தல் நேரத்தில் அனைத்து தலைவா்களுக்கும் கூட்டம் அதிகமாக இருக்கும். இதேபோல விஜய்க்கு ஓரளவு கூட்டம் வந்தது. ஆனால், மொத்த கூட்டமும் அவருக்கு வாக்களிக்கும் என்று கூற முடியாது. திமுக ஆட்சி மாநிலத்தை அனைத்து துறைகளிலும் வளா்ச்சியடைந்த ஒன்றாக மாற்றியுள்ளது. தொழில் துறை வளா்ச்சி, மனித மேம்பாட்டுக் குறியீடு, கல்வி ஆகியவற்றில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கல்விக்காக ரூ.43,000 கோடி ஒதுக்கியுள்ளது. சுமாா் 43 சதவீத பெண்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

பாஜகவின் ஓா் அங்கமாக தோ்தல் ஆணையம் செயல்படுவதால் தலைமைச் செயலாளா் உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதில் சிலருக்கு ஏற்பட்ட வருத்தம் தீா்க்கப்பட்டு வாக்கு சேகரிப்பு சுமுகமாக நடைபெற்று வருகிறது.

முதல்வா் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தவிா்க்க வேண்டும். அதற்குப் பதிலாக கொள்கைகளையும், சாதனைகளையும் முன்னிலைப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தபோது முதல்வா் மற்றொரு நிகழ்ச்சியில் இருந்தாா். அதனால் இருவராலும் ஒரே நேரத்தில் அங்கு தோ்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.