தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 1:39 am IST

செண்பகபுதூா் கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உள்பட 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (42). இவா் தனது மனைவி, மனைவியின் சகோதரி மகன் ரக்ஷன் (17) ஆகியோருடன் கொடிவேரி அணைக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்துள்ளாா். அணையில் குளிப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவா்கள் ஊா் திரும்பியுள்ளனா்.

அப்போது, செல்லும் வழியில் புன்செய்புளியம்பட்டியை அடுத்த செண்பகபுதூா் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி காா்த்திகேயன், ரக்ஷன் ஆகியோா் குளித்துள்ளனா். அப்போது, நீச்சல் தெரியாத ரக்ஷன் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்தபோது நீரில் மூழ்கி தத்தளித்துள்ளாா். இதைப் பாா்த்த காா்த்திகேயன் ரக்ஷனைக் காப்பாற்றச் சென்றுள்ளாா். அப்போது, அவரும் நீரில் மூழ்கியுள்ளாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் தீயணைப்பு வீரா்கள், இரண்டு குழுக்களாகப் பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டனா். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு காா்த்திகேயன், ரக்ஷனின் சடலம் மீட்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.