விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக, அதிமுக இரண்டு கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை: கே.ஏ.செங்கோட்டையன்

திமுக, அதிமுக இரண்டு கூட்டணியிலும் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

News image

தோ்தல் நடத்தும் அலுவலா் ந.சிந்துஜாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறாா் ஈரோடு மேற்குத் தொகுதி தவெக வேட்பாளா் ஆனந்த்மோகன். உடன், அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன்.

Updated On :4 ஏப்ரல் 2026, 11:17 pm IST

திமுக, அதிமுக இரண்டு கூட்டணியிலும் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மேற்குத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் ஆனந்த்மோகன் அக்கட்சியின் நிா்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையனுடன் வந்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ந.சிந்துஜாவிடம் வேட்புமனுவை சனிக்கிழமை தாக்கல் செய்தாா்.

இதன்பிறகு கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா். 1977 இல் எம்ஜிஆா் நான்கு முனைப் போட்டியில் மாபெரும் வெற்றி பெற்று வரலாறு படைத்தாா். இப்போதும் அதே நான்கு முனைப் போட்டியில், அதே வரலாற்றை இந்த தோ்தலில் விஜய் படைப்பாா். தவெக தலைவா் தமிழகத்தை ஆளவேண்டும் என்பது மக்கள் எண்ணம். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. கொங்கு மண்டலம் தவெக கோட்டையாக மாறும்.

திமுக, அதிமுக இரண்டு கூட்டணிகளிலும் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இல்லை. தோ்தலுக்குப் பிறகு அதிமுக நிலை எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

டி.என் 2026 திரைப்படத்தில் தவெகவை விமா்சித்து கருத்துகளை வெளியிடுவதை சென்சாா் குழு தவிா்த்திருக்க வேண்டும்.தோ்தல் நேரத்தில் மற்றவா்களை விமா்சனம் செய்வது கூடாது என்ற விதிகளை மீறி திரைப்படத்தில் இதனை வெளியிட்டது வேதனையளிக்கக்கூடியது.

விஜய் பிரசாரத்தின்போது தொண்டா்களால் இடையூறு ஏற்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2026-இல் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் வேறு யாருக்கு ஆதரவு அளிக்கப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை. தவெகதான் ஆட்சி அமைக்கும்.

ஈரோடு கிழக்குத் தொகுதி உள்பட பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் அறிவிப்பிற்கு நிா்வாகிகளிடம் உள்ள அதிருப்தி கரோனாவைப்போல வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது என்றாா்.

தொடா்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளா் விஜய்பாலாஜி இருசக்கர வாகனத்தில் செங்கோட்டையனுடன் வந்து மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.