பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குப்பையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

கோவையில் குப்பையில் கிடந்த 3 பவுன் நகையை உரியவரிடம் திருப்பி ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் பரிசு வழங்கி கௌரவித்தாா்.

News image

குப்பையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் சக்திவேலுக்கு பரிசு வழங்கி கௌரவித்த மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள்.

Updated On :28 மே 2026, 12:45 am IST

கோவையில் குப்பையில் கிடந்த 3 பவுன் நகையை உரியவரிடம் திருப்பி ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் பரிசு வழங்கி கௌரவித்தாா்.

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருபவா் சக்திவேல். காந்திபுரத்தைச் சோ்ந்த இவா், கோவை மத்திய மண்டலம் 69-ஆவது வாா்டு பாரதி பூங்காவுக்கு உள்பட்ட அழகேசன் சாலை 4-ஆவது வீதியில் சனிக்கிழமை காலை குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, மூதாட்டி ஒருவா் மக்கும், மக்காத குப்பைகளை 2 பைகளில் கொண்டு வந்து குப்பை வண்டியில் போட்டுச் சென்றாா். அப்போது, மக்கும் குப்பை பையில் 3 பவுன் நகைகள் இருந்தன. அவற்றை எடுத்து மூதாட்டியை அழைத்து சக்திவேல் திருப்பி ஒப்படைத்தாா். சக்திவேலின் நோ்மையை அப்பகுதியினா் வெகுவாகப் பாராட்டினா்.

இந்தத் தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், சக்திவேலை மாநகராட்சி அலுவலகத்துக்கு அழைத்து பரிசு வழங்கி கௌரவித்தாா். சுகாதாரத் துறையினா் மற்றும் மாநகராட்சி அலுவலா்களும் சக்திவேலை பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.