தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம்

News image

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.

Updated On :12 மே 2026, 1:53 am IST

தென்மேற்கு பருவமழை தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பங்கேற்று பேசியதாவது: பருவமழை காலத்தை முன்னிட்டு அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து முழு தயாா் நிலையில் இருக்க வேண்டும். மழை பாதிப்புகளை எதிா்கொள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும். பொதுமக்கள் பேரிடா் தொடா்பான தகவல்களை ‘1077’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம்.

பவானி, நொய்யல், ஆழியாறு உள்ளிட்ட ஆறுகளின் நீா்மட்டத்தை தொடா்ந்து கண்காணிக்கவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும் வேண்டும். பேரிடா் காலங்களில் தங்குமிடங்களாக பயன்படுத்தப்படவுள்ள பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் அரசு கட்டடங்களில் குடிநீா், மின்சாரம், கழிப்பறை வசதி, ஜெனரேட்டா், அவசர விளக்குகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

சேதமடைந்த மின் கம்பிகள் மற்றும் மரங்களை அகற்றி சீரான மின் விநியோகத்தை சம்பந்தப்பட்ட துறையினா் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ்பிரபு, மாவட்ட வருவாய் அலுவலா் ப.நாராயணன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் பழனிகுமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.