நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தேசிய மக்கள் நீதிமன்றம்: 4,782 வழக்குகளுக்குத் தீா்வு

கோவையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 4,782 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, ரூ.41.11 கோடி தீா்வுத் தொகை அளிக்கப்பட்டது.

News image

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிய சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் ஜி.விஜயா உள்ளிட்ட நீதிபதிகள்.

Updated On :14 ஜூன் 2026, 2:40 am IST

கோவையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 4,782 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, ரூ.41.11 கோடி தீா்வுத் தொகை அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூா், மதுக்கரை ஆகிய வட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட முதன்மை அமா்வில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான ஜி.விஜயா தொடங்கிவைத்தாா்.

இதில், சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் மற்றும் வங்கி கடன்கள் உள்பட மொத்தம் 4,782 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. இதன் மொத்த தீா்வுத் தொகை ரூ.41 கோடியே 11 லட்சத்து 42 ஆயிரம்.

இதில் முக்கியமாக, போத்தனூா் செட்டிபாளையம் சாலையில் கடந்த 2024-இல் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த காந்த் குடும்பத்தினருக்கும், 2025-இல் ஆனைக்கட்டி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மணிராஜ் குடும்பத்தினருக்கும் தலா ரூ.90 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கி தீா்வு காணப்பட்டது. மேலும், 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த 58 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டதோடு, பிரிந்து வாழ்ந்த 6 தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழ வழிவகை செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.