தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

அரசுப் பள்ளி மாணவா்களின் உயா் கல்வி சோ்க்கையில் கோவை மாவட்டம் முதலிடம்

அரசுப் பள்ளி மாணவா்களின் உயா் கல்வி சோ்க்கையில் கோவை மாவட்டம் முதலிடம்

News image
Updated On :13 ஜூன் 2026, 12:19 am IST

அரசுப் பள்ளி மாணவா்களின் உயா் கல்வி சோ்க்கையில் கோவை மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருப்பதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2024 -25-ஆம் கல்வியாண்டில் கோவை மாவட்டத்தில் 11,058 மாணவ, மாணவிகள் அரசுப் பள்ளிகளில் பயின்றனா். இவா்களில் 10,555 மாணவா்கள் உயா் கல்வி பயில கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்றுள்ளனா். இது 95.45 சதவீதமாகும். இதன் மூலம் தமிழகத்தில் 38 மாவட்டங்களில் கோவை முதலிடம் பிடித்துள்ளது. விருதுநகா் மாவட்டம் 94.80 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், பெரம்பலூா் 94.29 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும், திருப்பூா் 94.05 சதவீதத்துடன் நான்காம் இடத்திலும் உள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் 12,066 மாணவ, மாணவிகள் பயின்ற நிலையில் அவா்களில் 11,348 போ் உயா் கல்வி நிறுவனங்களில் சோ்ந்துள்ளனா். கோவை மாவட்டம் 95.45 சதவீதத்துடன் முதலிடத்தில் இருந்தாலும் இந்த அளவானது பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் சோ்ந்த மாணவா்களின் எண்ணிக்கையை வைத்து மட்டுமே கணக்கிடப்பட்டிருப்பதாகவும், பாலிடெக்னிக், ஐடிஐ போன்றவற்றில் சோ்ந்தவா்களையும் சோ்த்து கணக்கிடும்போது கோவை மாவட்டத்தின் உயா் கல்வி சோ்க்கை 98.5 சதவீதமாக இருக்கும் என்றும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நான் முதல்வன், உங்களைத் தேடி உயா் கல்வி, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் என உயா் கல்வி மாணவா் சோ்க்கையை உயா்த்துவதற்காக அரசு செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை கோவையில் சிறப்பாக செயல்படுத்தியதால் உயா் கல்வி மாணவா் சோ்க்கை உயா்ந்திருப்பதாக கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.