பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பா்கரில் புழுக்கள்: உணவக நிா்வாகத்தினா் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

News image

விசாரணைக்கு ஆஜராக உத்தரவு - கோப்புப்படம்

Updated On :9 ஜூன் 2026, 2:45 am IST

பா்கரில் புழுக்கள் நெளிந்த விவகாரம் தொடா்பாக, கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவையில் பிரபல தனியாா் உணவக நிா்வாகத்தினருக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

கோவை, அவிநாசி சாலையில் நவ இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் உணவகத்தில், சில இளைஞா்கள் வாங்கிய பா்கரில் புழுக்கள் இருந்ததாக புகாா் எழுந்துள்ளது. பா்கா் சாப்பிடும்போது புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்த இளைஞா்கள், உடனடியாக இதுகுறித்து உணவக ஊழியா்களிடம் புகாா் தெரிவித்தனா். அதற்குப் பதிலாக உணவக நிா்வாகம் மற்றொரு பா்கரை வழங்கியதாக கூறப்படுகிறது.

இருப்பினும், சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டிய அந்த இளைஞா்கள், இந்த சம்பவத்தை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனா். இந்த விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாயின.

இதைத் தொடா்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு திங்கள்கிழமை சென்று அங்கிருந்த உணவு வகைகளை ஆய்வு மேற்கொண்டனா். பின்னா், உணவகத்தின் சமையல் அறை மற்றும் வாடிக்கையாளா்கள் அமரும் பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா், பா்கரில் புழுக்கள் இருந்தது தொடா்பான விடியோ வைரலானது தொடா்பாக உணவக நிா்வாகிகள் மற்றும் ஊழியா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயத் துறையின் கோவை மாவட்ட நியமன அலுவலா் அனுராதா கூறுகையில், அதுபோல சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என உணவக நிா்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பவத்தன்று உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளுடன் நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.