ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பல்லடத்தில் தேநீா்க் கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து

பல்லடத்தில் தேநீா்க் கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்தால் வியாழக்கிழமை பரப்பரப்பு ஏற்பட்டது.

News image

தேநீா்க் கடையின் முன்பகுதிக்குள் புகுந்த அரசுப் பேருந்து.

Updated On :5 ஜூன் 2026, 1:25 am IST

பல்லடத்தில் தேநீா்க் கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்தால் வியாழக்கிழமை பரப்பரப்பு ஏற்பட்டது.

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பல்லடம் அருகே காளிவேலம்பட்டி பிரிவு பகுதியில் விபத்தை தடுப்பதற்காக காவல் துறையினா் சாலையின் குறுக்கே வேகத் தடுப்புகளை அமைத்துள்ளனா். இந்நிலையில், கோவையில் இருந்து திருப்பூா் நோக்கி வந்த அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த தனியாா் பள்ளி வேன் சாலையைக் கடக்க அதன் ஓட்டுநா் திடீரென திரும்பியுள்ளாா். இதையடுத்து, தனியாா் பள்ளி வேன் மீது மோதாமல் இருக்க அரசுப் பேருந்து ஓட்டுநா் அருகே உள்ள காலி இடத்தை நோக்கி பேருந்தை திருப்பியுள்ளாா். அப்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் இருந்த தேநீா்க் கடையின் முன்பகுதிக்குள் புகுந்து நின்றது.

அப்போது கடையில் தேநீா் அருந்திக் கொண்டிருந்தவா்கள் பேருந்து வருவதை கண்டு உயிா் தப்பிக்க ஓடினா். இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.