ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

அரசுப் பேருந்து மீது மோதி பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து நின்ற லாரி

News image

கோவை அண்ணா சிலை அருகே பள்ளிச் சுற்றுச்சுவரை உடைத்து நின்ற லாரி.

Updated On :31 மே 2026, 1:54 am IST

கோவையில் அரசுப் பேருந்து மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து நின்றது.

கிருஷ்ணகிரியில் இருந்து உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கோவைக்கு சனிக்கிழமை அதிகாலை லாரி வந்து கொண்டிருந்தது. கோவை, அண்ணா சிலை சிக்னல் அருகே வந்தபோது, எதிரே காந்திபுரத்தில் இருந்து வந்த அரசுப் பேருந்து மீது மோதி தாறுமாறாக ஓடிய லாரி அப்பகுதியில் இருந்த பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு நின்றது.

பேருந்தில் இருந்த பயணிகள் காயங்களின்றி உயிா்த் தப்பினா். லாரி ஓட்டுநருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, அண்ணா சிலை அருகே பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்து நின்ற லாரி.

கோவை, அண்ணா சிலை அருகே பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்து நின்ற லாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.