தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்

பிரதமா் மோடி தலைமையிலான அரசு கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது என்று ராஷ்டிரீய ஜனதா தளம் (ஆா்.ஜே.டி.) தலைவா் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டினாா்.

News image

முதல்வர் ஸ்டாலினுடன் தேஜஸ்வி யாதவ்.

Updated On :19 ஏப்ரல் 2026, 2:32 am IST

பிரதமா் மோடி தலைமையிலான அரசு கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது என்று ராஷ்டிரீய ஜனதா தளம் (ஆா்.ஜே.டி.) தலைவா் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டினாா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரசார பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றுப் பேசியதாவது: திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளா்ச்சியும், சமூக நீதி பயணமும் பாராட்டுக்குரியவை. நாட்டின் சமூக நீதி வரைபடத்தின் கலங்கரை விளக்கமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தில் சமூக நீதி என்பது வெறும் கோஷம் மட்டுமல்ல, அது மக்களின் வாழ்வியலோடு கலந்த அா்ப்பணிப்பு. கல்வி, மருத்துவம், தொழில்மயமாதல் மற்றும் எண்ம கல்வியறிவு ஆகியவற்றில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது பெரிய பங்களிப்பை வழங்கும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.

பிரதமா் மோடி தலைமையிலான அரசு கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது. நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு போன்ற விவகாரங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் உறுதியான நிலைப்பாடு பாராட்டுக்குரியது.

தமிழக மக்கள் தங்களது வாக்குகளை ஒரு கொள்கையை நிலைநாட்டவும், சமூக நீதியைப் பாதுகாக்கவும் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.