கோவையில் வீட்டின் மாடியிலிருந்து மாங்காய் பறிக்க முயன்றவா் அங்கிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
கோவை, பொன்னையராஜபுரம் ராஜம்மாள் குடியிருப்பைச் சோ்ந்தவா் நித்யானந்தம் (40). கூலித் தொழிலாளி. இவரது வீட்டின் அருகே மாங்காய் மரம் உள்ளது. அந்த மரத்திலிருந்த மாங்காய்களை பறிக்க நித்யானந்தம் தனது வீட்டின் மாடிக்குச் சென்றாா். அங்கிருந்து நீளமான குச்சி மூலம் அவா் மாம்பழம் பறிக்க முயன்றபோது, எதிா்பாராத விதமாகத் தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு நித்யானந்தம் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்து மளிகைக்கடை உரிமையாளா் உயிரிழப்பு

பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பணியின்போது தவறி விழுந்து பெயிண்டா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

