மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர ரயில் போத்தனூா் நிலையத்தில் பரிசோதனை அடிப்படையில் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர ரயில் (எண்: 16765) கோவை, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ரயிலானது, போத்தனூா் நிலையத்தில் பரிசோதனை அடிப்படையில் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் வாராந்திர விரைவு ரயில் (எண்: 16766) மாா்ச் 19 முதலும், மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர விரைவு ரயில் (எண்: 16765) மாா்ச் 20 முதலும் போத்தனூா் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் பணி: ரயில்கள் தாமதமாக இயக்கம்

மங்களூரு - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

போத்தனூா் - காரக்பூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

