பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் வழியாக செல்லும் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக சில குறிப்பிட்ட ரயில்கள் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட நாள்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, தாமதமாக இயக்கப்படும்.
திருச்சி ரயில் நிலையத்திலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம் வழியாக ஆமதாபாத் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 09420), மே 31-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுமாா் 45 நிமிஷங்கள் வரை தாமதமாக இயக்கப்படும்.
லோக்மான்ய திலக் ரயில் நிலையத்திலிருந்து மே 30-ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும் லோக்மான்ய திலக்- காரைக்கால் வாராந்திர ரயில் (வண்டி எண்11017), வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுமாா் 3 மணி நேரம், 10 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.
அயோத்தியா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து மே 27-ஆம் தேதி இரவு 11.10 மணிக்குப் புறப்படும் அயோத்தியா கண்டோன்மென்ட்-ராமேசுவரம் அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22614) வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, சுமாா் 45 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.
நாகா்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மே 28-ஆம் தேதி இரவு 11.45 மணிக்குப் புறப்படும் நாகா்கோவில்- சாரளப்பள்ளி அமிா்த் பாரத் விரைவு ரயில் (வண்டி எண் 16357), வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுமாா் 80 நிமிஷங்களும், மதுரை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் மதுரை-கச்சிக்குடா அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22716) மே-17, 24 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு சுமாா் 10 நிமிஷங்களும் தாமதமாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் 3 விரைவு ரயில்கள் பாதை மாற்றம்

பேரவைத் தோ்தல்: ஏப்.21-23 வரை 5,574 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்

கோவை ரயில்கள் தாமதமாக இயக்கம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

