பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட அரசுக்கு அறிக்கை

வேலூா் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடுவது தொடா்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

News image

டாஸ்மாக் (கோப்புப்படம்)

Updated On :20 மே 2026, 12:04 am IST

வேலூா் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடுவது தொடா்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது -

பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவது தொடா்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வேலூா் பழைய, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மூடப்பட்டதால் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் கூட்டம் அதிகமாக உள்ளது.

அங்கு ஏஎஸ்பியுடன் ஆலோசிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கடையை மூட அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

காட்பாடியில் உள்ள ஆதரவற்றோா் விடுதியில் காணாமல் போன குழந்தைகளை தேடி வருகின்றனா். காப்பகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் ஒருங்கிணைப்பின்பேரில் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் அனைத்து காப்பக கண்காணிப்பாளா்கள், வாா்டன்கள், நடத்துநா்களை அழைத்து பின்பற்றவேண்டிய வழிமு றைகள் குறித்து தெரிவிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.