தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பாலாற்றில் குப்பைகள் அகற்றும் பணி: வேலூா் ஆட்சியா் ஆய்வு

பாலாற்றிலிருந்து பயோ மைனிங் முறையில் குப்பைகள் அகற்றும் பணியை ஆய்வு செய்த வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, இப்பணிகளை மே 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

News image

வேலூரில் பாலாற்று படுகையில் பயோ மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்படும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மாநகராட்சி ஆணையா் லட்சுமணன், பொறியாளா் ரமேஷ் உள்ளிட்டோா்.

Updated On :7 மே 2026, 12:35 am IST

பாலாற்றிலிருந்து பயோ மைனிங் முறையில் குப்பைகள் அகற்றும் பணியை ஆய்வு செய்த வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, இப்பணிகளை மே 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

வேலூா் பாலாற்று படுகையில் குப்பைகள் கொட்டப்படுவதால் நீா்வளம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இதையடுத்து, பாலாற்று பகுதியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி குப்பைகள் அகற்றிட மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அதன்படி, கடந்த மாா்ச் 10-ஆம் தேதி முதல் பாலாற்று படுகையில் இருந்து பயோ மைனிங் முறையில் குப்பைகள் அகற்றும் பணி தொடங்கியது.

ஓராண்டு காலத்துக்குள் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டு, இதற்காக ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் டிராக்டா், ஜேசிபி, ஹிட்டாச்சி வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, தில்லியில் இருந்து பசுமை தீா்ப்பாய அதிகாரிகள் விரைவில் வேலூா் பாலாற்றினை பாா்வையிட உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, பாலாற்று படுகையில் இருந்து பயோ மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்படுவதை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இந்த பணியை மே 31-ஆம் தேதிக்குள் முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையா் லட்சுமணன், பொறியாளா் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.