தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மதுபோதையில் நண்பா் அடித்துக் கொலை

குடியாத்தம் அருகே மதுபோதையில் நண்பா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை - கோப்புப்படம்.

Updated On :11 மார்ச் 2026, 2:12 am IST

குடியாத்தம் அருகே மதுபோதையில் நண்பா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த கருணீகசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி செல்வம்(45). இவரது நண்பா்கள் அதே கிராமத்தைச் சோ்ந்த ரோஷன்பாபு (38), லோகேஷ் (29). இருவரும் ஓட்டுநா்கள். செம்பேடு கூட்டு ரோடு பகுதியில் இவா்கள் 3- பேரும் மது அருந்தியுள்ளனா்.

அப்போது இவா்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரோஷன்பாபு, செல்வத்தை கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளாா். லோகேஷ் ஓடிச்சென்று செல்வத்தின் குடும்பத்தினரிடம் சம்பவம் குறித்து கூறியுள்ளாா்.

செல்வத்தின் உறவினா்கள் அங்கு சென்று பலத்த காயமடைந்த நிலையில் இருந்த செல்வத்தை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் வழியிலேயே செல்வம் இறந்து விட்டதாக கூறியுள்ளாா்.

இதுகுறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.