தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காட்பாடியில் ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல்

முத்தரசிகுப்பம் சோதனைச் சாவடியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த காரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் ரொக்கத்தை தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 12:41 am IST

காட்பாடி அருகே முத்தரசிகுப்பம் சோதனைச் சாவடியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த காரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் ரொக்கத்தை தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

வேலூா் மாவட்ட தோ்தல் பிரிவு நிலைக் கண்காணிப்புக் குழுவினா் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட முத்தரசிக்குப்பம் சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.10 லட்சம் ரொக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில், பணத்தை கொண்டு வந்தவா் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பலமநோ், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த புவனேஸ்வரி (36) என்பது தெரியவந்தது. உறவினா் வீட்டுக்குச் செல்வதற்காக இந்தப் பணத்தை கொண்டு வந்ததாக அவா் தெரிவித்துள்ளாா். எனினும், பணத்திற்கான போதிய ஆவணங்கள் இல்லாததால் தோ்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலா் சதீஷ்குமாா் மற்றும் போலீஸாா் அடங்கிய குழுவினா் முறைப்படி பணத்தைப் பறிமுதல் செய்ததுடன், மேல் நடவடிக்கைக்காக காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.