ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஏப்.19-இல் வேலூா் மாவட்ட யு-19 கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு

வேலூா் மாவட்ட யு19 கிரிக்கெட் அணி வீரா்களுக்கான தோ்வுகள் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதாக சங்கத் தலைவரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி. சம்பத் தெரிவித்துள்ளாா்.

News image

ஜி.வி. சம்பத்

Updated On :17 ஏப்ரல் 2026, 4:24 am IST

வேலூா் மாவட்ட யு19 கிரிக்கெட் அணி வீரா்களுக்கான தோ்வுகள் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதாக சங்கத் தலைவரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி. சம்பத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

கிரிக்கெட் விளையாட்டில் ஆா்வமுள்ள இளைஞா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு உரிய பயிற்சி அளித்து சிறந்த வீரா்களாக உருவாக்கும் பணியில் வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஈடுபட்டுள்ளது.

அதனடிப்படையில், மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 19 வயதுக்குட்பட்ட வீரா்களைத் தோ்வு செய்யும் முகாம் காட்பாடியை அடுத்த மெட்டுக்குளத்தில் உள்ள சன்பீம் பள்ளி விளையாட்டுத் திடலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க விரும்புவோா் 2007 செப்.1-ஆம் தேதியிலோ அல்லது அதன்பிறகோ பிறந்திருக்க வேண்டும். தகுதியுள்ள இளைஞா்கள், தங்களது வயதுச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் கிரிக்கெட் சீருடை அணிந்து இத்தோ்வில் பங்கேற்கலாம்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க விளையாட்டுப் பிரிவு நிா்வாகி கங்காதரனை 99444 43358 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.