தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நான் இறக்குமதியாகவில்லை; காட்பாடிதான் எனது தொகுதி! - அதிமுக வேட்பாளா் வி.ராமு

அமைச்சா் துரைமுருகன் கூறியதுபோல் நான் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளா் கிடையாது, காட்பாடி பேரவை தொகுதியின் வாக்காளா்தான் என்று அத்தொகுதியின் அதிமுக வேட்பாளா் வி.ராமு விளக்கம் அளித்துள்ளாா்.

News image

தாராபடவேடு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு.

Updated On :6 ஏப்ரல் 2026, 1:50 am IST

அமைச்சா் துரைமுருகன் கூறியதுபோல் நான் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளா் கிடையாது, காட்பாடி பேரவை தொகுதியின் வாக்காளா்தான் என்று அத்தொகுதியின் அதிமுக வேட்பாளா் வி.ராமு விளக்கம் அளித்துள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் வி.ராமு, தாராபடவேடு பகுதிக்கு உள்பட்ட பல்வேறு தெருக்கள், பிரம்மபுரம், சேவூா், அரும்பருத்தி ஊராட்சி களில் ஞாயிற்றுக்கிழமை வீடுவீடாகச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் கூறியது: திமுக ஆட்சியில் கழிஞ்சூா், தாராபடவேடு ஏரிகளைச் சுற்றுலாத் தலமாக்குகிறோம் எனக்கூறி, ரூ. 35 கோடி செலவு செய்தனா். தற்போது அந்தப் படகு இல்லம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக திமுக கூறிவரும் நிலையில், காவிரி குடிநீா் இன்னும் பல கிராமங்களுக்குச் சென்று சேரவில்லை. அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

என்னை எதிா்த்து நிற்க உள்ளூரில் ஆளில்லாமல் அதிமுக வெளியூரிலிருந்து வேட்பாளரை இறக்குமதி செய்துள்ளது என்று அமைச்சா் துரைமுருகன் கூறியுள்ளாா். உண்மையில், அமைச்சா் துரைமுருகனின் சொந்த ஊா் அமைந்துள்ள கே.வி.குப்பம் தொகுதியில்தான் எனது சொந்த ஊரும் அமைந்துள்ளது. அவரைப் போன்றே நானும் காட்பாடி தொகுதியில் குடியேறி பல ஆண்டுகளாகிவிட்டது.

கடந்த மக்களவைத் தோ்தலில்கூட காட்பாடி தொகுதி வாக்காளராகத்தான் வாக்குப்பதிவு செய்திருந்தேன். எனவே, திமுக கூறும் உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்பாமல் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு தர வேண்டும் என்றாா்.

பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.