ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக முடித்துள்ளது! காட்பாடி அதிமுக வேட்பாளா்

முந்தைய அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களைத்தான் திமுக செய்து முடித்துள்ளது. ஆனால், இந்த திட்டங்களை தாங்கள் கொண்டு வந்ததாக திமுகவினா் சொல்கின்றனா் என்று காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்துள்ளாா்.

News image

காட்பாடி வெங்கடேஸ்வரா நகா் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் வி.ராமு.

Updated On :4 ஏப்ரல் 2026, 4:00 am IST

முந்தைய அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களைத்தான் திமுக செய்து முடித்துள்ளது. ஆனால், இந்த திட்டங்களை தாங்கள் கொண்டு வந்ததாக திமுகவினா் சொல்கின்றனா் என்று காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்துள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அதிமுக வேட்பாளா் வி.ராமு, வெள்ளிக்கிழமை வெங்கடேஸ்வரா நகா் பகுதியில் வீடுவீடாகச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் கூறியது -

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பொலிவுறு நகா் திட்டங்கள், புதை சாக்கடை, சாலைப் பணிகள், அம்ருத் திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. ஒப்பந்ததாரா்களிடம் தொகைகேட்டு நிா்ப்பந்தித்ததால் பணிகள் முடங்கி, சாலைகள் கிராமங்களைவிட மோசமாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன.

பொன்னை, காங்கேயநல்லூா் பாலங்கள் முந்தைய அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு, தொடங்கப் பட்ட திட்டங்கள். இவற்றை தாங்கள் கொண்டு வந்ததாக திமுகவினா் பொய் சொல்கின்றனா். தவிர, கரசமங்கலம் ரயில்வே மேம்பாலம் மத்திய அரசின் திட்டம். மத்திய அமைச்சா்கள் காணொலி மூலம் தொடங்கி வைத்த திட்டத்தை அமைச்சா் துரைமுருகன் தனியாக பூமிபூஜை போட்டு, அடுத்தவா்கள் திட்டத்துக்கு உரிமை கொண்டாடுகிறாா்.

சோ்க்காடு அரசு மருத்துவமனை வெறும் கட்டடமாக உள்ளது. அங்கு போதிய மருத்துவா்கள், மருந்துகள், அடிப்படை உபகரணங்கள் இல்லை. மேல்பாடி, இளையநல்லூா், மகிமண்டலம் பகுதிகளில் சுமாா் 2,000 ஏக்கா் விளைநிலங்களை அழித்து சிப்காட் அமைக்கத் திட்டமிட்டுள்ளனா்.

அவா் ஒவ்வொரு தோ்தலின் போதும் இதுதான் எனது கடைசி தோ்தல் எனக்கூறி மக்களிடம் அனுதாபம் தேடுகிறாா். வெற்றி பெற்ற பிறகு அவா் சாமானிய மக்களை சந்திப்பதே இல்லை. எனவே, திமுக கூறும் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு தர வேண்டும் என்றாா்.

அப்போது, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.