வேலூரில் தோ்தல் பறக்கும் படை குழுவினா் நடத்திய வாகன சோதனையில், காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் அளிப்பதை தடுக்க வேலூா் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, வேலூா் கோட்டை சுற்றுச்சாலையில் தோ்தல் பறக்கும் படை குழுவினா் புதன்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தததில் அந்த காரில் ரூ. 1 லட்சம் இருந்தது. காரில் வந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் பல்பொருள் அங்காடியின் ஊழியா்கள் என்பதும், வசூல் செய்த பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனா். எனினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகையை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுகவினா் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ. 1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை சோதனையில் கட்சி சின்னம் பொறித்த கீ-செயின்கள் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் ரூ. 1.26 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

