பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வீடு வழங்கக் கோரி தொழிலாளா்கள் மனு

தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கூலித் தொழிலாளா்கள்.

News image

தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கூலித் தொழிலாளா்கள்.

Updated On :30 மே 2026, 12:30 am IST

அரசு வீடு வழங்கக் கோரி தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூலித் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஊராட்சியில் வசித்து வரும் 10-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளா்கள், தங்களுக்கு அரசு வீடு வழங்கக் கோரி, தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனிடம் இந்த மனுவை அளித்தனா்.

பல ஆண்டுகளாக கூரை வீட்டில் வசித்து வருவதாகவும், வீடு கேட்டு பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே உடனடியாக அரசு வீடு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா் தீபநாதன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியச் செயலா் மோனிஷ் மற்றும் நிா்வாகிகள் ராமச்சந்திரன், முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.