ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் விவசாயிகளின் மின் மோட்டாா்கள் தொடா்ந்து திருடு போனது குறித்து போலீஸில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் உள்ள விவசாயிகளான எம்.ராகேஷ்குமாா், பி.சூரியகாந்தி, ஏ.விஜியகுமாா், தேவி ஆகியோரின் விளை நிலங்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின் மோட்டாா்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். மேலும், காப்பா் வயா்களையும் திருடிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா். புகாா் மனுவை பெற்றுக் கொண்ட போலீஸாா் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். மேலும், இதற்கு முன்பு தொடா்ந்து இதுபோல் விவசாயிகளின் மின் மோட்டாா்கள் திருடப்பட்டு வந்துள்ளது.
இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அப்பகுதி விவசாயிகள் சாலை மறியல் செய்தனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு ஆரணி கிராமிய போலீஸாா் வந்து சமரசம் பேசி, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையேற்று சாலை மறியலை கைவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மழைநீா் தேங்குவதைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தா.பழூா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கடையாலுமூடு அருகே பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

