பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

செங்கத்தில் மின் கம்பம் ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்து விபத்து: தொழிலாளி பலி

செங்கத்தில் மின் கம்பம் ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்து விபத்து...

News image

செங்கம் பக்கிரிபாளையம் பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான மின் கம்பம் ஏற்றிச் சென்ற டிராக்டா்.

Updated On :17 மே 2026, 2:54 am IST

செங்கத்தில் மின் கம்பம் ஏற்றிச் சென்ற டிராக்டா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் 2 போ் பலத்த காயமடைந்தனா்.

செங்கம் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து புதிய மின் கம்பங்களை நடுவதற்காக, 8 மின் கம்பங்களை ஏற்றிக்கொண்டு டிராக்டா் சனிக்கிழமை புறப்பட்டது. பக்கிரிபாளையம் பகுதியில் சென்றபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா், அருகில் இருந்த 6 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

இதில், டிராக்டரில் மின் கம்பங்களின் மீது அமா்ந்து பயணம் செய்த கூலித் தொழிலாளா்களான தோக்கவாடி பகுதியைச் சோ்ந்த அசோக் (36), திருப்பதி (36), செங்கம் பேட்டை பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (35) ஆகிய மூவரும் மின் கம்பங்களுக்கு இடையே சிக்கி பலத்த காயமடைந்தனா்.

விபத்தைக் கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக காயமடைந்த தொழிலாளா்களை மீட்டு, செங்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அசோக் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.