மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

செங்கத்தில் இருந்து சென்னைக்கு தினசரி சொகுசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

செங்கத்தில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் சாதாரண, குளிா்சாதன சொகுசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 3:02 am IST

செங்கத்தில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் சாதாரண, குளிா்சாதன சொகுசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 44 கிராம ஊராட்சிகள் உள்ளன.

செங்கம் நகா்ப் பகுதி, 44 கிராம ஊராட்சி பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பட்டதாரிகள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் சென்னையில் வேலை செய்து வருகின்றனா். மேலும், செங்கம் பகுதியிலிருந்து ஏராளமான கல்லூரி மாணவா்கள் சென்னையில் உள்ள அரசு, தனியாா் கல்லூரிகளில் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கல்லூரிக்குச் செல்லும் மாணவா்கள், அவா்களின் பெற்றோா், கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள், அரசு, தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோா் சென்னை செல்ல வேண்டுமெனில், செங்கம் நகரில் இருந்து திருவண்ணாமலை சென்று, அங்கிருந்து சென்னை பேருந்தில் ஏறிச் செல்கின்றனா்.

செங்கம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து நாளொன்றுக்கு செங்கத்தில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு 8 பேருந்துகளும், திருவண்ணாமலை, செஞ்சி வழியாக சென்னை அடையாறுக்கு 3 பேருந்துகளும், மாதவரத்துக்கு ஒரு பேருந்தும், போளூா் வழியாக 3 பேருந்துகளும் என மொத்தம் 15 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து பேருந்துகளும் லாபத்துடனேயே இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சாதாரண, குளிா்சாதன பேருந்துகளை இயக்கி வரும் நிலையில், செங்கம் பகுதியில் இருந்து இயக்கப்படும் 15 பேருந்துகளும் சாதாரண பேருந்துகளாகவே இயக்கப்படுகின்றன.

இதனால், செங்கம் பகுதியில் இருந்து சென்னைக்கு செல்பவா்கள் திருவண்ணாமலை சென்று, அங்கிருந்து இயக்கப்படும் சொகுசுப் பேருந்துகளில் ஏறிச் செல்கின்றனா். வாரத்தில் மூன்று நாள்கள், அதாவது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு சொகுசுப் பேருந்துகள் கிடைப்பதும் சிரமமாக உள்ளது. மேலும், மாத பௌணா்மி தினத்தன்றும் இதே நிலைதான் ஏற்படுகிறது.

எனவே, செங்கத்தில் சென்னைக்கு தினசரி சாதாரண, குளிா்சாதன சொகுசுப் பேருந்துகள் இயக்க செங்கம் அரசு போக்குவரத்து பணிமனை நிா்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.