திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, ஆரணி, செங்கம் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை செவ்வாய்க்கிழமை வரப்பெற்றன.
வந்தவாசி (தனி) தொகுதிக்கு 351 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை செவ்வாய்க்கிழமை காலை வரப்பெற்றன.
தமிழக சட்டப்பேரவை தோ்தலை ஒட்டி வந்தவாசி(தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 293 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக 351 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 351 வாக்குப்பதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 380 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் திருவண்ணாமலையிலிருந்து வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை எடுத்து வரப்பட்டன.
இவற்றை தொகுதி தோ்தல் அலுவலா் எஸ்.ஆா்.எம்.மதுசெழியன், உதவி தோ்தல் அலுவலா் பா.ஜெயவேல் மற்றும் அனைத்து கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் இறக்கி எண்ணிக்கை சரிபாா்க்கப்பட்டு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அறையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன.
இதனைத் தொடா்ந்து அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
ஆரணி
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 323 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை காலை வரப்பெற்றன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்ட 387-மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 387 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 427 விவிபட் இயந்திரங்கள் ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டன.
அதிமுகவைச் சோ்ந்த நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட பிரதிநிதி சகாயம், திமுக நகரச் செயலா் மணிமாறன், ஒன்றியச் செயலா் சுந்தா், காங்கிரஸ் நிா்வாகி சைதை சம்பந்தம், பாஜக மாவட்ட பொதுச்செயலா் சதீஷ், வட்டாரத் தலைவா் ராஜேஷ், பாஜக விவசாய அணி நிா்வாகி குணாநிதி, விசிக மாவட்டச் செயலா் ந.முத்து, ஒன்றியச் செயலா் வடுகசாத்து ரமேஷ், தேமுதி மாவட்ட துணைச் செயலா் பாஸ்கரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிா்வாகிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாா்வையிட்டனா். பின்னா் தோ்தல் நடத்தும் அலுவலா் சீ.சிவா தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதில், உதவி தோ்தல் அலுவலா் அகத்தீஸ்வரன், உதவி வட்டாட்சியா்கள் கணபதி, சுகுமாா், ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செங்கம்
செங்கம் தனி தொகுதியில் செங்கம், ஜவ்வாதுமலை, தண்டராம்பட்டு பகுதியை உள்ளடக்கி மொத்தம் 341 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து 341 வாக்குப்பதிவு இயந்திங்கள் மற்றும் கூடுதலாக 68 என மொத்தம் 409 வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை காலை வரப்பெற்றன.
செங்கம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் இளவரசன், துணை அலுவலா் முருகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலையில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தனி அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்து அறையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் ஆணைய கிடங்கில் பாதுகாப்பாக வைப்பு

செங்கல்பட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறுதிக் கட்ட ஒதுக்கீடு

செய்யூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்வைப்பு

வேலூா்: 5 தொகுதிகளுக்கு 1,711 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

