மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாலை அகலப்படுத்தும் பணிகள் ஆய்வு

வந்தவாசி அருகே சாலையை அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ்.சரவணன்.

News image
Updated On :14 மார்ச் 2026, 6:40 am IST

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் வந்தவாசி - காஞ்சிபுரம் இருவழிச் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ்.சரவணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, பெருநகா் அருகிலிருந்து வீரம்பாக்கம் கூட்டுச் சாலை வரையிலான 6.6 கி.மீ. தொலைவு இருவழிச் சாலையை ரூ.40 கோடி செலவில் 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ்.சரவணன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சாலையின் தரத்தை ஆய்வு செய்த அவா், பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, செய்யாறு கோட்டப் பொறியாளா் சந்திரன், உதவிக் கோட்டப் பொறியாளா்கள் ராஜேந்திரன், இன்பநாதன், உதவிப் பொறியாளா் கருணாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.